தமிழக விவசாய நிலங்களில் உள்ள மதுபான கடைகள் எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக விவசாய நிலங்களில் உள்ள மதுபான கடைகள் எத்தனை என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-02-13 15:42 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  இதுபற்றி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வருகிற 20ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதேபோன்று ஈரோடு மயிலம்பாடியில் விவசாய நிலத்தில் உள்ள மதுபான கடையை உடனடியாக அங்கிருந்து அகற்றி, நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்