திண்டிவனம் அருகே பேருந்து - வேன் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி
திண்டிவனம் புறவழிச்சாலையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதி பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள விளங்கம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.