ஜவுளி வியாபாரி வீட்டில் வருமானவரிசோதனை கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.25 லட்சம் பறிமுதல்

பீகாரைச் சேர்ந்தவர் அருண்குமார். சென்னை சூளை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

Update: 2019-04-10 18:57 GMT
சென்னை, 

பீகாரைச் சேர்ந்தவர் அருண்குமார். சென்னை சூளை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது கடை மற்றும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.25 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்