திருச்சியில் மாணவர்கள் யாருமின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்
திருச்சியில் பள்ளி கூடம் ஒன்றிற்கு மாணவர்கள் யாருமின்றி 2 ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், போதிய வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உரிய வசதி செய்து கொடுத்தால் மட்டுமே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை. மாணவ மாணவிகள் செல்லாமல் 2 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.