திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது

சுப்பிரமணிய கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Update: 2019-08-29 01:31 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். 

ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை  காலை 6 மணிக்கு  தொடங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்