டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-10-15 05:24 GMT
தூத்துக்குடி

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால்  அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது.

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்