சிவகங்கையில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு
சிவகங்கையில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சிவகங்கை,
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, சிவகங்கையில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.