பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரிப்பு

பெட்ரோல் விலை கடந்த 10 நாட்களில் ஒரு ரூபாய்க்கும் மேலாக உயர்ந்துள்ளது.

Update: 2019-11-16 01:17 GMT
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 

அதன்படி, இன்று  எண்ணெய் நிறுவனங்கள்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.68 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு ரூபாய்க்கும் மேலாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்