சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு உத்தரவு
`சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.