தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதன்படி, அன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.