முரசொலி நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு நீதிமன்றம் சம்மன் 20-ந்தேதி ஆஜராக உத்தரவு

முரசொலி நில விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2020-02-21 22:45 GMT
சென்னை, 

முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர் சீனிவாசன் மீது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர் சீனிவாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் மார்ச் 20-ந்தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்