வன்முறை தீர்வு ஆகாது: டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

டெல்லியில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-26 23:00 GMT
சென்னை, 

தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலும், அதனால் உருவான கலவரமும் 4-வது நாளாக நீடிப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த வன்முறையில் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும்.

வன்முறை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்தால் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிட முடியும். இதை உணராமல் வன்முறை மற்றும் கலவரத்தை கட்டவிழ்த்து விடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, டெல்லியில் அமைதியையும், சட்டம் - ஒழுங்கையும் நிலைநிறுத்த மத்திய உள்துறை மந்திரியும், டெல்லி அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்