தமிழக மதுக் கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை? வைரல் வீடியோ
தமிழக மதுக் கடைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
சென்னை
தமிழகத்தில் 4 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மது கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 1 மீட்டர் இடைவெளி விட்டு வரும் வகையில் வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவில் கொண்டுவரப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தற்போது தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கேரளாவில் சமூக இடைவெளியில் நின்று மதுபானம் வாங்கி சென்ற மக்களின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது தமிழகத்தில் சமூக இடைவெளியில் நின்று மதுபான பாட்டில்கள் வாங்கி செல்லும் நபர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.முகேஷ் என்பவர் தனது சமூக இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
— முகேஷ் [MUKESH] (@NaanThaanMUKESH) March 20, 2020