நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம் என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை
நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம் என கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை,
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை எழுந்ததையடுத்து, வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.