தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது- சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-16 14:15 GMT
சென்னை,

தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:- 

சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ. தொலைவில்   'ஆம்பன்' புயல்  மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.  20-ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். 

மேலும் செய்திகள்