புதுச்சேரியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
புதுவையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகளில் 32 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 306 ஆக உள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.