சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்த காவலர் முத்துராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-07-03 16:59 GMT
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ்  ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்