செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-04 02:07 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும், 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,113 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்