பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தீர்ப்பு: தி.மு.க. கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற தீர்ப்பு, தி.மு.க. கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-11 19:45 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்.

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை கருணாநிதி உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன்.

சமூகம், பொருளாதாரம், குடும்பம் என அனைத்து தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாக பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்