கண் தானம் செய்வதாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
நாளை தேசிய கண் தானத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதல் அமைச்சர் பழனிசாமி கண் தானம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தலமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அதற்கான ஒப்புதல் படிவத்தில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டார்.