தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-01 07:40 GMT
சென்னை, 

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார். இதுகுறித்த புதிய சட்ட மசோதா, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி மனுவில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பான சட்ட மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது? என்று தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்