நிவர் புயலின் தாக்கம்; சென்னையில் 44 இடங்களில் தண்ணீர் தேங்கியது

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் 44 இடங்களில் தண்ணீர் தேங்கியது.

Update: 2020-11-24 18:52 GMT
சென்னை, 

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் நேற்று விட்டு விட்டு கன மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடு போன்று காட்சி அளித்தன. வாகனங்கள் தத்தளித்து சென்றன. தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் தேங்கிய மழைநீர் வடிந்தன.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 44 இடங்களில் மழை நீர் தேங்கியது இதில் 6 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டது. மற்ற 38 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. கனமழை எதிரொலியாக 3 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்