நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

நாகர்கோவில், நெல்லையில் இன்றும், நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2020-12-21 23:56 GMT
கோப்புப்படம்
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (22-ந்தேதி) பிற்பகல் 12.10 மணிக்கு முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்தை பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு நாகர்கோவில் ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடக்கும் இடத்தை மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். இன்றிரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் தங்குகிறார். நாளை (23-ந்தேதி) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு காலை 10 மணிக்கு செல்கிறார். அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் குடும்ப விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து விமான மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை பிற்பகல் 3.20 மணிக்கு வந்தடைகிறார்.

மேலும் செய்திகள்