கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை
கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
6810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வழங்க, ரூபாய் ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.