ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடை
ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலைய ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததால் இரவு 11.30 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்கள் தரை இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை விமானகள் இயக்க விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடு ஆனது நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.