மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-24 07:28 GMT
கோப்புப்படம்
சென்னை, 

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்!” என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்