மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் - கமல்ஹாசன்

மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-12 14:49 GMT
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவரை விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அற்புதம்மாள் போராட்டம் குறித்து கமல்ஹாசனும் பதிவு செய்திருக்கிறார். அவரின் கண்ணீருக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என்றார்.

மேலும் செய்திகள்