கோவேக்சின் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்த சென்னையில் சிறப்பு முகாம் அறிவிப்பு
கோவாக்சின் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்த சென்னையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கோவாக்சின் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்த சென்னையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தி 28 நாட்களை கடந்தவர்கள் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 59 ஆயிரம் பேர் காலம் கடந்தும் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை. 62,050 கோவாக்சின் தடுப்பூசிகள் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.