ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி

ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்; 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-08-13 09:45 GMT
சென்னை

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணியை அடுத்த சந்தவால் பகுதியில் 
ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது  திடீர் என வேனின் டயர் வெடித்து. எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்