மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி வைகோ வேண்டுகோள்

மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி வைகோ வேண்டுகோள்.

Update: 2021-08-27 20:08 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மணப்பாறை மக்களின் பல ஆண்டு கோரிக்கையை உணர்ந்து, அரசு கல்லூரி அமைக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

உயர்கல்வித்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புகளில், தமிழகத்தில் திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, சேர்க்காடு ஆகிய ஊர்களில் இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்.

அந்த மகிழ்ச்சியில் மணப்பாறை மக்களும் பங்கேற்கின்ற வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மணப்பாறையில் அரசு கல்லூரி அமைத்துத்தர வேண்டும்; நடப்பு கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்