தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-09-28 07:24 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  நல்லான் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதேபோன்று, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார்.  இதுதவிர, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்