தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். நல்லான் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
இதேபோன்று, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார். இதுதவிர, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.