அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-20 05:08 GMT
சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்தும். இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் டுவிட்டர் பதிவில்,

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்