வரும் 9ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து வரும் 9ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2021-12-06 12:54 GMT
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. அரசை கண்டித்து வரும் 9ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதுபற்றி, ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில், பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை, வெள்ளம் பாதித்த மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ள பாதிப்புகளுக்கு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்