கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை

கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-01-12 06:56 GMT
கோவை

கோவை ஆலாந்துறை, தென்னமநல்லூர் பகுதியில் மணி என்பவரது தோட்ட வீட்டுக்கு , 30 வயது வடமாநில வாலிபர் குடிபோதையில் இரவில் வந்து கதவை தட்டி திருட முயன்றுள்ளார்.  

அவரை கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து ஆலாந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் வந்து விசாரணை நடத்தி கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். இரவாகி விட்டதால் மறுநாள் வந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறிச்சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை வடமாநில வாலிபர் அந்த பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார். போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்