வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
வருகிற 31-ந்தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மிருகங்களை பாதுகாப்பதற்காக பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதியை ரத்து செய்வதுடன், வருகிற 31-ந்தேதி வரை பூங்காவை மூடுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.