பெண் குழந்தைகளை பேணி பாதுகாப்போம் - எடப்பாடி பழனிசாமி

பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-24 11:44 GMT
சென்னை,

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

'நாடெங்கிலும் இருக்கும் பெண் குழந்தைகளின் கல்வி, உடல்நலம், சமஉரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டுள்ள தேசிய பெண் குழந்தைகள் நாளில், அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்து, இந்த தேசம் செவிமடுக்கட்டும், நம் பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம்'

மேலும் செய்திகள்