தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - முழுவீச்சில் ஏற்பாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Update: 2022-05-03 14:20 GMT
சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுமையடைந்துள்ள நிலையில், அனைத்து அதிகாரிகளும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்