மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-13 19:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 22 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,360 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,672 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 154 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்