தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஊத்தங்கரையில் தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-10 18:45 GMT

ஊத்தங்கரை

பாலக்கோடு தாலுகா தடி கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (வயது 23). கூலித்தொழிலாளி. ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள கரிபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (24). உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கரிபெருமாள் வலசை கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் நேதாஜி தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கணபதி (24), கோவிந்தன் (47), செல்வம் (20) ஆகிய 3 பேரை சிங்காரப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்