செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய 39 ஏரிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-12 20:37 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 39 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய பாசன ஏரிகளான மானாமதி ஏரி, தையூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் கூடுவாஞ்சேரி, சேலையூர், ஊரப்பாக்கம், பொத்தேரி மற்றும் செம்பாக்கம் ஏரிகளும் நிரம்பியுள்ள நிலையில், இந்த ஏரிகளுக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்