இன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்சென்ட்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது

Update: 2024-03-08 14:46 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இன்று கணினி அறிவியல் , உயிரி வேதியியல் , அரசியல் அறிவியல் , புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடந்தது.

இந்த நிலையில் , இன்று நடைபெற்ற பொதுத்தேர்வை மொத்தம் 5,144 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்