ஊரப்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2022-08-31 21:22 IST

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள அய்யஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி(வயது2) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டு வாசலில் இருந்த மழை நீர் தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து.

குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக குழந்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைப் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் குழந்தை ஷாலினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்