கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-11-26 05:11 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்