நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ேதன்கனிக்கோட்டை அருகே நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் உள்பட 3 ேபர் உயிர் தப்பினர்.

Update: 2023-09-08 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:-

ேதன்கனிக்கோட்டை அருகே நடுரோட்டில் சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் உள்பட 3 ேபர் உயிர் தப்பினர்.

சரக்கு வாகனம்

தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை கிராமத்திற்கு நர்சரி பண்ணைகளில் செடிகள் ஏற்றுவதற்காக நேற்று காலை சரக்கு வாகனம் சென்றது. ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த மஞ்சு (வயது 22) என்பவர் வாகனத்தை ஓட்டி சென்றார்.

சின்ன பென்னங்கூர் அருகே தனியார் கிரானைட் மற்றும் டைல்ஸ் கடை அருகே சென்ற போது வாகனத்தின் பின்பகுதியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டிரைவர் மஞ்சுவிடம் கூறினர்.

3 பேர் உயிர் தப்பினர்

அவர் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது வாகனத்தில் தீப்பிடித்தது. இதனால் அவருடன் வந்த 2 பேரும் கீழே குதித்து உயிர் தப்பினர்.

தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்