முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு

ஆற்காட்டில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.

Update: 2022-09-25 17:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஆற்காடு பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்