புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

தேனியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-08-06 14:46 GMT

தேனி சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 29). இவர், தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவர் தனது வீட்டில் இருந்து புகையிலை பொருட்களை கடைக்கு விற்பனைக்காக எடுத்து செல்ல முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 670 மதிப்பிலான 222 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்