சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு...!
சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.;
கோப்பு படம்
சென்னை,
சென்னை கொரட்டூர் பகுதியில் காவல் நிலையம் அருகே உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது.
நில அதிர்வின் காரணமாக பதற்றமடைந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.