வைக்கோல் படப்பில் திடீர் தீ

நரிக்குடி அருகே வைக்கோல் படப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-09 19:06 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி ஒன்றியம், நாலூர் அருகே கடுக்காய்க்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. வைக்கோல் படப்பு முழுவதும் எரிந்த நிலையில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான டிராக்டரும் தீ விபத்தில் சிக்கியது. இதில் டிராக்டரின் ஒரு பகுதி மட்டும் எரிந்து சேதமானது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு துறையினர் வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீயை அனைத்தனர். சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிராக்டர் உள்பட வைக்கோல் படப்பு தீயில் எரிந்து சேதமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்