மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

பணகுடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-08-23 20:18 GMT

பணகுடி:

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சாமுவேல் மகன் டேனியல் (வயது 20). டிப்ளமோ படித்துள்ள இவர் தூத்துக்குடியில் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை டேனியல் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் இருந்து தனது ஊருக்கு புறப்பட்டார்.

7 மணி அளவில் பணகுடியை அடுத்த தெற்கு வள்ளியூர் சந்திப்பில் அவர் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் நின்ற மரத்தில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்