ஸ்கூட்டரில் சென்ற முதியவர் தவறி விழுந்து பலி

ஸ்கூட்டரில் சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2022-08-27 22:21 GMT

சங்ககிரி:

சங்ககிரி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி கிராமம், கோவிந்தன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 63). தனக்கு உடல் நிலை சரி இல்லாததால், நேற்று காலை தனது மருமகள் கீதாவுடன் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சுந்தரம் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். ஸ்கூட்டரை கீதா ஓட்ட, சுந்தரம் பின்னால் அமர்ந்து இருந்தார். மங்கரங்கம்பாளையம் மேடு அருகே வந்த போது, நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து 2 பேரும் கீழே தவறி விழுந்தனர். இதில் சுந்தரத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்